search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர் தற்கொலை"

    • 5 வருடங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது.
    • குடிபோதையில் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    கோவை,

    நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 26). டிரைவர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து கிருஷ்ணகுமாரை அவரது மனைவி பிரிந்து சென்றார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அவருக்கு குன்னூரை சேர்ந்த கணவரை விவாகரத்து செய்து வாழ்ந்து வந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் 2 பேரும் கோவை வந்தனர். கிருஷ்ணகுமார் கருமத்தம்பட்டி அருகே உள்ள எம்.ராயர் பாளையத்தில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார்.

    சம்பவத்தன்று கிருஷ்ணகுமார் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணகுமார் மனைவியை தாக்கி வெளியே அனுப்பினார்.

    பின்னர் வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட கிருஷ்ணகுமாரின் உடல் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிறகு அனுப்பி வைத்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன் -மனைவி இடையே ஏற்பட்ட தகராறால் கடந்த ஓராண்டுக்கு முன்பு அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
    • வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை,

    ராமநாதபுரம் மாவட்டம் திருவடானையை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 39). ஆட்டோ டிரைவர். இவர் கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தில் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில், கணவன் -மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன்பு அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் சில நாட்களாக விஜயராகவன் மனவேதனையில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் யாருமில்லாத போது தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.
    • இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சுரேஷ் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரியை அடுத்துள்ள எக்காண்ட அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 37). தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று வீட்டில் யாருமில்லாத போது தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். பின்னர் வீடு திரும்பிய சுரேஷின் உறவினர்கள் அவர் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சுரேஷ் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • காதல் மனைவிக்கு வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு இருப்பது விமல்குமாருக்கு தெரியவந்தது.
    • மனமுடைந்த நிலையில் காணப்பட்ட விமல்குமார், போடிநாயக்கன்பட்டியில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் விமல்குமார் (வயது 21). ஆட்டோ டிரைவர். மேலும் நாமக்கல் அரசு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் இவரும், கல்லூரியில் படிக்கும் தருமபுரியை சேர்ந்த மாணவி சுமலதா என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் விமல்குமார், காதலியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். பின்னர், நாமக்கல்லில் உள்ள தனது தாத்தா வீட்டில், காதல் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

    இதனிடையே அவரது காதல் மனைவிக்கு வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு இருப்பது விமல்குமாருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமல்குமார், மனைவியிடம் இது பற்றி கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியேறிய அவரது மனைவி, தனது கள்ளக்காதலனுடன் சென்று விட்டார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட விமல்குமார், போடிநாயக்கன்பட்டியில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விமல்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதல் மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • டியூசனுக்கு சென்றிருந்த மகனை அழைத்து வருவதற்காக மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில் டிரைவர் தூக்கில் தொங்கி உள்ளார்.
    • டிரைவர் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் கமிஷனர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அலாவுதீன் (38). இவர் அதே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் டிரைவராக பணிபுரிந்த வந்தார்.

    இவருக்கு சுனிதா என்ற மனைவியும், மகளும் உள்ளனர். ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பெண் ஒருவருடன் அலாவுதீன் சகஜமாக பேசி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி நிர்வாகம் இதுபற்றி அலாவுதீனின் மனைவியிடம் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சங்கர்நகர் போலீசில் புகார் அளித்தார்.

    இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் அலாவுதீன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    டியூசனுக்கு சென்றிருந்த மகனை அழைத்து வருவதற்காக மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில் அவர் தூக்கில் தொங்கி உள்ளார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவரது செல்போனை ஆய்வு செய்த போது அதில் தற்கொலைக்கான காரணம் குறித்து பேசிய வீடியோ ஒன்று இருந்தது. அதில் அலாவுதீன் கூறி இருப்பதாவது:-

    ஆஸ்பத்திரியில் நான் ஒரு பெண்ணுடன் சகஜமாக பேசுவதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அந்த பெண்ணுடன் என்னை தொடர்புபடுத்தி பேசியது மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனது சாவுக்கு ஆஸ்பத்திரி உரிமையாளரும், மேலும் சில பெண் ஊழியர்களுமே காரணம். என்னையும் அந்த பெண்ணையும் அவமானப்படுத்தியதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் தற்கொலை செய்கிறேன்.

    இவ்வாறு அலாவுதீன் வீடியோவில் வாக்குமூலம் போன்று பதிவு செய்து வைத்திருந்ததையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

    • வாலாஜா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை முத்துக் கடை அருகே உள்ள வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி ( வயது 36 ). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜீவ்காந்தி பிணத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் எதனால் தூக்குப் போட்டுக் கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×